புதன், 3 அக்டோபர், 2012

உபதேசம்......




உபதேசம்......

எவையெல்லாம் போதும் என்று கேட்டால், "இவைகளே போதும்' என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

* எவர் ஒருவர் நண்பரைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன்.

* எவர் ஒருவர்
வழிகாட்டியைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு அல்குர்ஆன் போதுமானது.

* எவர் ஒரு உபதேசியைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு மரணம் போதுமானதாகும்.

* எவர் பணத்தைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு போதுமென்ற மனம் போதுமானது.


* உழைப்பினால் சோர்ந்த நிலையில் மாலை நேரத்தைச் சந்திப்பவன் அந்த மாலை நேரத்தை அல்லாஹ் அவனை மன்னித்த மாலை நேரமாக சந்திக்கின்றான்.

* பகுத்தறிவையே அல்லாஹ் முதலில் படைத்தான். பகுத்தறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வை நெருங்குவதற்கு அது துணை புரியும். ஒவ்வொன்றுக்கும் ஒரு தூண் உண்டு. ஈமான் கொண்டவருக்குரிய தூண் அவர்களுடைய பகுத்தறிவேயாகும்.

* பாலில் தண்ணீர் கலந்து வியாபாரம் செய்பவனிடம் பாலை விட்டும் தண்ணீரை பிரித்து எடு என்று மறுமையில் அவனுக்கு சொல்லப்படும்.

* அநியாயமான வாதங்களுக்கு துணையிருப்பவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாவார்.

* உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

* எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

* உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள்.

*அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

* மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

* நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.

* அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

* கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.

* வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

* எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

* வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

* முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.

                                                       அஹமட் யஹ்யா......


நன்மையும்,தீமையும் ஏவுவதன் அவசியம்

اَلسَّلاَمُ عَلَيْكُم ؤَرَحْمَةُ اللهِ وَبَرَكَّاتُهُ
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
********************************************************************************
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
_______________________________________________________________________













நன்மையும்,தீமையும் ஏவுவதன் அவசியம்

அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

இஸ்லாம் காட்டும் வாழ்க்கை முறையும் . நன்மையை ஏவித்த தீமையைத் தடுப்பதில் எமது பங்களிப்பும், அவசியமும்..

இஸ்லாம் என்பது பூரண வாழ்க்கையின் வடிவமாக தான் மக்களுக்குள்
புகுத்தப்பட்டது. ஒரு முழுமையான வாழ்வை வாழ்வதற்கான நெறிமுறைகள் . ஒழுக்க முறைகளோடு நிறைவாக வந்திட்ட ஒரு அழகான மர்ர்க்கமே இஸ்லாம். இதற்கேல்லாம் ஒரு அச்சாணியாக குர்ஆன் என்னும் வேத நூலையும் . முன் மாதிரியாக வாழ்ந்து காட்டிய இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் மூலம் வாழும் வழியையும் அழகாகச் சொன்ன, ஒரு உன்னத மார்க்கம் இஸ்லாம். எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கை அல்ல என்பதையும், அல்லாஹ் வகுத்திட்ட வரையறை, நெறி முறைகளில்,வாழ்வதே அல்லாஹ் விரும்பும் உண்மையான வாழ்க்கை என்பதையும் சொன்ன சத்திய மார்க்கம் இஸ்லாம்..மட்டுமல்லாமல், இந்த அழகான வாழ்க்கையை ஒரு சமுதாய அமைப்பில் ஒவ்வொரு மனிதனும் எப்படியாக எதிர்க்கொள்ள வேண்டும், என்பதையும் தெட்டத் தெளிவாக விளக்கியே கூறியிருக்கிறது..

இஸ்லாமிய சமுதாய அமைப்பு என்பது, தன்னை தான்தோன்றித்தனமாக அடையாளப்படுதவில்லை. மாறாக மனிதனை சிந்தனா சக்தி உள்ளவனாகவும், அடுத்தவர் பற்றிய கவலை உடையோனாகவும் அடையாளப் படுத்த முனைகிறது. அதாவது நன்மையின் பக்கம் மனிதனை இழுப்பவனாகவும் தீமைகள் அவை எந்த உருவத்தில் தலைகாட்டினாலும் எதிர்த்துப் போராடும் படி மக்களை தட்டி எழுப்புவனாக இருக்க வேண்டும் என்றும், தீமைகளை எதிர்த்து நிற்பதில் தன்னிடமிருக்கும் சக்திகள் அனைத்தையும் பயன்படுத்தி இவற்றின் மூலம் சமுதாயத்தில் வலுவானதொரு ஒழுக்கச் சூழலை உருவாக்குவதும் ஒவ்வொரு மனிதனிதும் மிக பெரிய கடமையாக இருக்கிறது என்பதையும் வலியுறுத்திச் சொல்கிறது...எனவே மனிதன் உலகத்திற்கு பாரிய பொறுப்புக்களொடு வந்திருக்கிறான்.. இந்த பொறுப்பக்களிலிருந்து விடுபட நினைக்கும் எந்த மனிதனும். அல்லாஹ்வின் பார்வையில் நல்ல மனிதனாக இனங்காணப்படடாட்டான். அவன் வெறும் சுயநலம் மிக்கவனாகவும், அல்லாஹ்வின் திருப்தியைப பெறாதவனாகவுமே கணிக்கப்படுவான்..

“உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) நன்மையின் பால் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுகின்றவர்களாகவும், தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்குகின்றவர்களாகவும் இருக்கட்டும். அவர்களேதாம் வெற்றி பெற்றோர்”. (3:104)

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக........


தொகுப்பு.........

அஹமட் யஹ்யா...
ஹொரோவபத்தான..
அனுராதபுரம்

இலங்கை....   





Facebook.........தரும் பாடம்.




Facebook.........தரும் பாடம்.

அஹமட் யஹ்யா.....ஹொரோவபத்தான
அனுராதபுரம்.ஸ்ரீலங்கா..
                                                                                                








அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

https://plus.google.com/u/0/106961992858656270337/posts


புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

பேஸ்புக் என்னும் ஆடை.....

Facebook

அல்லாஹ்வின் திருப் பெயரால்...

இன்று இணையத் தளங்களின் பாவனை அதிகரித்து இணையத்தளம் மூலம் பல நல்ல விடயங்கள் பரிமாறப் படுகிறது.பல சகோதரர்கள் இணையத்தளம் மூலம் கல்வி,இஸ்லாம்,அறிவியல் என்று பல விடயங்களை மக்களுக்கு வழங்குகின்றனர்.இதற்கென பல இணையத்தளங்கள் இருப்பது சந்தோஷமான விடயமாகும்.இணையத்தளங்கள் நல்ல விடயங்களை போதித்தாலும் அதில் பயனடைபவர்கள் மிகச்சிலர் என்பது கவலைக்குரிய விடயமாகும்.அதிலே எமது முஸ்லிம்கள் இணையத் தளங்களில் அதிகம் உலா வருகிறார்கள்.முக்கியமாக facebookபோன்ற சமூக வலை தளங்களில் முஸ்லிம் இளம் சமூகத்தினர் அதிகம் காலத்தை கழிக்கிறார்கள்.அவர்கள் சரியான முறையில் இணையத்தளங்களை உபயோகிக்கிறார்களா என்று சற்று ஆராய்வது காலத்தின் தேவை.எனவே எமது முஸ்லிம் சமூகத்தினரின் facebook பாவனை எப்படி இருக்கிறது என்றும் அதன் விளைவு ,அதற்கான தீர்வு என்ன என்பதை சற்று நோக்குவோம்.

எமது முஸ்லிமான ஆண்கள்,பெண்கள் தவறான காதல் தொடர்பு,அசிங்கமான chatingஇன்னும் இது போன்ற சமூகச் சீரழிவை உருவாக்கும் காரியங்களுக்காக facebook ஐ உபயோகிக்கிறார்கள.

பொதுவாக ஆண்கள் பெண்கள் கலப்பில் இஸ்லாம் வரையறை செய்துள்ளது.அவற்றை பேணுவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.இவர்கள் chat மூலம் இணைவதால் ஷைத்தானின் தூண்டுதலால் பல கசப்பான சம்பவங்கள் நடந்துள்ளது.எனவே ஆண்கள்,பெண்கள் chat செய்வதை தவிர்ப்பது கட்டாயக் கடமையாகும்.

ஏனெனில் மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் ஒதுன்குவதட்கு சந்தர்ப்பம் அளிக்கப் படும் நபர்களில் ஒரு பெண் தவறான தொடர்ப்புக்கு அழைக்கும் போது அல்லாஹ்வுக்காக அதை நிராகரிக்கும் நபரும் அடங்குவார்.facebook உபயோகிக்கும் ஆண்,பெண் இருபாலாரும் கவனிக்க வேண்டிய விடயமாகும்.அதே போல் மார்க்க விடயங்களுக்காக தூய இஸ்லாத்தை சொல்லும் நோக்கில் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கலாம்.

இன்னும் சிலர் பொய்யான id க்களை உருவாக்கி ஆண்,பெண் போல் ஏமாற்று மோசடி செய்கிறார்கள்.

ஒரு முஸ்லிமிடம் இருக்கக் கூடாத பண்புகளில் ஏமாற்று மோசடியும் ஒன்று.முஸ்லிம் என்று பெயர் வைத்துக்கொண்டு இது போன்ற செயல்களில் ஈடு பட்டால் அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். இது நயவஞ்சகனின் பண்பாகும். இதற்கு பதிலாக ஒரு இஸ்லாமிய id யை உருவாக்கி அழைப்புப் பனி செய்யலாம்

இன்னும் சில சகோதர,சகோதரிகள் சினிமா,ஆடல் பாடல்,ஆபாசமான போடோக்கள்,ஆபாசமான படங்கள்,சினிமா நடிகைகளின் அரை நிர்வாண படங்கள்,போடோக்கள் ஆகியவற்றை பரப்பும் தளமாக facebook ஐ அமைத்துள்ளார்கள்.

Facebook போன்ற இணையத்தளங்கள சிறுவர்கள்,உலமாக்கள்,அறிவு ஜீவிகள், இளம் சமூகத்தினர் என்று பலரும் உலாவரும் இடமாகும்.இவ்விடத்திலே நீங்கள் இது போன்ற காட்சிகளை இட்டால் அதை பார்வையிட்டு பாவத்தை செய்யும் ஒவ்வொருவருடைய பாவத்தின் பங்கும் உங்களைச் சேரும்.ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்

''யார் ஒருவர் ஒரு தீய விடயத்தை நடைமுறைப் படுத்தி அதன் மூலம் மற்றவர்கள் அதை எடுத்து நடந்தால் அந்த பாவத்தின் பங்கு அவர்களையும் சாரும்'' என்று.எனவே நபியை நேசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் சினிமா நடிக, நடிகைகளின் போடோக்கள்,ஆபாச காட்சிகள்,ஆடல் பாடல்களை முற்றாக தவிர்க்க வேண்டும்.அவ்வாறு செய்தால்தான் அவர்கள் முஸ்லிம்கள்.இல்லாவிட்டால் பெயரளவு ''லேபல்''முஸ்லிம்கள்.

'உங்களில் ஒருவர் தனது பெற்றோர், பிள்ளைகள் மற்றும் முழு மனித சமூகத்தையும் விட என்னை அதிகமாக நேசிக்காத வரையில் முஃமினாக முடியாது!'

ஒரு முஸ்லிம் தனது உயிரை விட உயர்வாக உத்தம நபி(ஸல்) அவர்களை நேசிப்பது கட்டாயக் கடமையாகும். நபி (ஸல்) அவர்களை நேசிக்காமல் ஒருவர் முஃமினாக முடியாது.

ஒருவரை நேசிப்பதாக இருந்தால் அவர் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும். அபோது தான் அவர் மீது அன்பு இருப்பதாக அர்த்தம். ஒரு உதாரணத்துக்கு மனைவி சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டுஇஅவள் விருப்பப்படி நடந்தால் என் கணவர் என் மீது அன்பாக இருக்கிறார்; என்னை மிகவும் நேசிக்கிறார்; என்று சொல்லுவாள். பெற்றோர்களும் அவ்வாறுதான் அவர்களுடைய சொல்லை கேட்டு அவர்கள் விருப்பப்படி நடந்தால் 'என் மகன் என் மீது அன்பாக இருக்கிறான்' என்று சொல்லுவர்கள்இ யாராக இருந்தாலும் சரிஇ ஒருவரை நேசிப்பதாக இருந்தால்இ அந்த நேசிப்பு உண்மைதான் என்றால் அவர் சொல்வதை எல்லாம் கேட்டு நடக்க வேண்டும். அப்போது தான் அவர் மீது உண்மையான பாசம் இருப்பதாக அர்த்தம்.

எனவே சகோதர, சகோதரிகளே facebook இல் இஸ்லாத்தை குழி தோண்டி புதைக்காமல் இஸ்லாத்தை வாழ வைப்போம்.







அஹமட் யஹ்யா....ஹொரோவபதான..அனுராதபுரம்.
SRI LANKA...